search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளம்பெண்ணிடம் செல்போன் பறிப்பு"

    சேலம் அண்ணா பூங்கா அருகே இளம்பெண் ஒருவர் செல்போன் பேசியபடி நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் அவரது செல்போனை பறித்து சென்றனர்.

    சேலம்:

    சேலம் அண்ணா பூங்கா பெரியார் மேம்பாலம் அருகே நேற்று மாலையில் இளம்பெண் ஒருவர், செல்போனில் பேசியபடி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், சாலையில் நடந்து சென்ற அந்த பெண்ணின் மீது மோதுவது போல் வந்து செல்போனை பறிக்க முயன்றனர். ஆனால், அந்த பெண் செல்போனை இறுக்கமாக பிடித்துக் கொண்டார்.

    உடனே 2 வாலிபர்களும் அந்த பெண்ணின் கண்ணத்தில் பளார், பளார் என அடித்து உதைத்து செல்போனை பறித்தனர். இதில் அந்த பெண் நிலைதடுமாறி கீழே விழ முயன்றார்.

    இதை பார்த்து பொதுமக்கள் அங்கு திரளுவதற்குள், 2 வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். செல்போனை பறிகொடுத்த பெண் அழுது கொண்டே இருந்தார். அவருக்கு பொதுமக்கள் ஆறுதல் கூறினார்கள்.

    சமீபகாலமாக பெரியார் மேம்பாலம் அருகே அடிக்கடி வழிப்பறிகளும், கொள்ளை சம்பவங்களும் நடக்கிறது. வலம் வரும் கொள்ளையர்கள் பெரியார் மேம்பாலம் அருகே கடைகள், காந்தி விளையாட்டு மைதானம், பூங்கா இருப்பதால் காதல் ஜோடிகள், பொதுமக்கள் தினமும் அதிக அளவில் கூடுவார்கள். கொள்ளை கும்பலின் பார்வை தற்போது இந்த பகுதியின் மீது விழுந்திருக்கிறது. அந்த பகுதியில் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் குறிப்பாக பெண்களை குறி வைத்து வழிப்பறி செய்கிறார்கள். இதனால் பெண்கள் பீதியில் உள்ளனர். அவர்களை மாநகர போலீசார் கமி‌ஷனர் சங்கர் கண்டுபிடித்து களையெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் இளம்பெண்ணிடம் செல்போனை பறித்து ஓடிய வாலிபர் பொதுமக்கள் விரட்டிப்பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்

    மதுரை:

    மதுரையில் இதய பகுதியான பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள எல்லீஸ்நகர் ரெயில்வே மேம்பாலத்தில் எப்போதும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும்.

    அதுபோல வழிப்பறி சம்பவங்களும் இங்கு அதிகம் நடந்து வருகிறது. போலீசார் அடிக்கடி ரோந்து வந்தாலும் மர்ம நபர்களின் வழிப்பறி அட்டகாசம் குறைந்தபாடில்லை.

    இன்று காலை திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த மோகனா என்ற இளம்பெண் பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து எல்லீஸ் நகர் மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் கையில் வைத்திருந்த செல்போனை மர்ம நபர் பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

    அந்த இளம்பெண் கூச்சல் போட்டதால் பொதுமக்கள் வழிப்பறி ஆசாமியை பின்தொடர்ந்து விரட்டிச் சென்றனர். திண்டுக்கல் ரோடு வரை விரட்டிச் சென்று அந்த ஆசாமியை பிடித்த பொதுமக்கள் திடீர்நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

    சுமார் 23 வயது மதிக்கத்தக்க அந்த வழிப்பறி ஆசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இளம்பெண்ணிடம் பறித்த செல்போனையும் மீட்டனர்.

    மர்மநபரை கைது செய்த போலீசார் இவருக்கு வேறு வழிப்பறி சம்பவத்தில் தொடர்பு உள்ளதா? என்றும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பட்டப்பகலில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் நடந்த இந்த செல்போன் பறிப்பு சம்பவத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    ×